
வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில்
இதழ் ஒடிந்த பூக்கள்..
முகவரி தொலைத்த பறவைகள்..
வாழ்க்கை என்னும் வேக குதிரையின்
கடிவாளம் தவறவிட்ட ஜீவன்கள்..
இவர்கள் பாதையில் கற்கள்..
சிரசில் வறுமை என்னும் முள் கிரீடம்..
இவர்கள் முதுகில்
யானைகளை ஏற்றி விளையாடின
ஆதிக்க குரங்குகள்..
நிகழ் காலத்துடன் போராடும்
தோல் போர்த்திய எலும்பு கூடுகள்..
மரணத்திற்கு காத்திருக்கும்
செல்லா காசுகள்,
பார்க்கலாம் காலனுக்காவது
கருணை இருக்கிறதா என்று...
No comments:
Post a Comment