எதையும் தாங்க பழகி இருந்தேன்
எதையும் எதிர்க்க துணிந்து இருந்தேன்
எதையும் தடுக்க பயின்று இருந்தேன்
இருப்பினும்
கால சுழற்சியில் ஒரு சூழ்நிலை கைதி நான்..
என் எண்ணங்கள் வார்த்தையாவது இல்லை
எப்போதும் வார்த்தைகளை அடக்கி,
மறுபடியும் எண்ணங்களாக்கி
மனதில் ஆழ குழி தோண்டி
புதைத்து கல்லறை கட்டுகிறேன்..
என் எண்ணங்கள் என்று உயிர்த்தெழுமோ?
என் எண்ணைகளை என் மனதினால்
என்றுமே பிரசவிக்க இயலாதென்று
உணர்த்தியது காலம்..
இதோ
மறுபடியும் புதுபிக்கிறேன்
என் எண்ணங்களுக்கு கட்டிய கல்லறையை...
மனதின் எண்ணம்
கடற்கரை பயணம்
ஏதோ சொல்ல ஓடி வந்து
சொல்லாமல் திரும்பி செல்லும் அலைகள்..
கரை காதலிக்கு நுரை மல்லி சூட்டி
அழகு பார்க்கும் நீல கடல்..
அலையிடும் ஓசைக்கும் அர்த்தங்கள் உண்டு..
தனிமையில் கேட்க புரியும் அலையின் மொழி..
சோகத்தில் அலையோசை கதறலாய் கேட்கும்..
இன்பத்தில் அதுவே எக்காளம் இசைக்கும்..
சொல்லாமல் திரும்பி செல்லும் அலைகள்..
கரை காதலிக்கு நுரை மல்லி சூட்டி
அழகு பார்க்கும் நீல கடல்..
அலையிடும் ஓசைக்கும் அர்த்தங்கள் உண்டு..
தனிமையில் கேட்க புரியும் அலையின் மொழி..
சோகத்தில் அலையோசை கதறலாய் கேட்கும்..
இன்பத்தில் அதுவே எக்காளம் இசைக்கும்..
நிலவு
இரவு வானத்தில்
கதிரவன் விட்டு சென்ற
வெள்ளை மை கையொப்பம்..
சுற்றி ஜொலிக்கும்
நட்சத்திர கூட்டம்
மை சிதறலோ??
கதிரவன் விட்டு சென்ற
வெள்ளை மை கையொப்பம்..
சுற்றி ஜொலிக்கும்
நட்சத்திர கூட்டம்
மை சிதறலோ??
தேடுகிறேன்..
சகதோழர்கள்...
அவர்களுக்கு
தேவைப்படும்போது தான்
தேடுகிறார்கள்...
நமக்கு
தேவைப்படும்போது
காணாமல் போகிறார்கள்..
தேவைப்படும்போது தான்
தேடுகிறார்கள்...
நமக்கு
தேவைப்படும்போது
காணாமல் போகிறார்கள்..
தோல்வி
..............
தமிழன்..
பக்கத்து வீடு எரிந்தால் எனக்கென்ன??
யார் மடிந்தால் எனக்கென்ன??
எந்த குடும்பத்தை கொன்றால் எனக்கென்ன??
எவன் சிதறி செத்தால் எனக்கென்ன??
என் வீடு என் பிள்ளை...
இது தான் என் உலகம்..
இறந்த தமிழனுக்கு அழ கூட
நம் கண்களில் ஈரம் இல்லை...
நாம் இப்படி இருக்கும் வரை
தமிழினம் வாழ வழியே இல்லை...
வெட்ககேடு...
யார் மடிந்தால் எனக்கென்ன??
எந்த குடும்பத்தை கொன்றால் எனக்கென்ன??
எவன் சிதறி செத்தால் எனக்கென்ன??
என் வீடு என் பிள்ளை...
இது தான் என் உலகம்..
இறந்த தமிழனுக்கு அழ கூட
நம் கண்களில் ஈரம் இல்லை...
நாம் இப்படி இருக்கும் வரை
தமிழினம் வாழ வழியே இல்லை...
வெட்ககேடு...
தேவதை..

குடும்பத்துடன்
கடைவீதியில் ஒரு
விடுமுறை நாளில் ..
வீதி உலா..
ஆரம்பமாக
ஆடையகம் ஒன்றினுள்
ஆனந்தமாய்
அணிவகுத்தோம்..
கடைக்குள்
நுழைந்ததும் கருப்பு
பொம்மைகளை
தேடின கண்கள்..
அவைகளின்
ஆடைகள்தான் எனக்கு
பொருந்துமேன்னும்
நம்பிக்கையினால்..
பல சமயங்களில்
கருகித்தான் போகிறது
மனசு..
சபைக்கு
ஒத்துவராத என்
கருப்பு நிறத்துக்கு..
ஆயினும் தேனாய்
தித்திக்கிறேன் என்
தாயின் பார்வைக்கு
மட்டும்..
என்ன??
காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன்குஞ்சா??
ஆனால் அவள்
காகம் இல்லையே!!
விழித்திறந்து பாருங்கள்
என் தேவதையை...
அங்கலாய்க்காமல்
ஆடைஎடுத்து,
வைத்து பார்த்து,
திருஷ்டி சுத்தி,
உச்சிமுகர்ந்தாள்
என் தேவதை..
திருப்தியாய்
பயணத்தை தொடர்ந்தேன்
அவளில் நிறைமுகத்தில்
மயங்கி...
அம்மா
காலம்
புத்தகமே..
தெளிவதென்று??
இது முடிவோ??
அழகிய பயணம்..
என்று சந்திப்போம்???
பெண்ணே...
காதலே...
உலகம் மாறி போச்சு..

குழந்தை குணம் மாறி போச்சு..
வியாபார வாழ்கை ஆச்சு..
அன்புக்கு மதிப்பு போச்சு.
காசுதான் கடவுள் ஆச்சு..
சிரிப்புக்குள்ளும் வேஷம் ஆச்சு..
பந்தபாசம் எங்கே போச்சு..
நெஞ்சமெல்லாம் வஞ்சம் ஆச்சு..
நேசம் மறந்து நாள் பல ஆச்சு..
வாழ்க்கை ரொம்ப அவசரமாச்சு..
நல்லதெல்லாம் செத்து போச்சு..
எல்லாமே நவீனமாச்சு..
இந்த மனிதம் தான் எங்கே போச்சு???
சிரி சிரி சிரி...
இனியது..
முறிவு
பேச்சு..
பிழையோ?
பொம்மை கல்யாணம்
புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..

தனித்திருக்கையில்..
கனிப்பொறி தேடல்களில்..
உனை தொலைக்க
முயன்று கொண்டிருந்தாய்..
உரையாடினோம்..
பேசியே தீர்த்தோம்..
உன் தனிமைகளையும்
என் சோகங்களையும்..
சந்தோஷம்
நிறைந்து இருந்தது..
என் சண்டைகளிலும்
உன் வீம்புகளிலும்..
இந்நாளில்
அம்மகிழ்ச்சி குறைந்து
சந்தேகம் கூடுவதை
கண்முன் காண்கிறேன்..
எதிர்பார்ப்பில்லாத
உறவு, இல்லாதவொன்று..
அன்பையேனும் எதிர்பார்போம்
உணர்ந்தேன் இன்று..
உன்னுடைய
அலுவலக அலுப்பிலும்..
தேர்வு தொல்லைகளிலும்
மறந்தாயோ என்னை?
இன்று நம்
அலைபேசிகள் பெரும்பாலும்
பரிமாறி கொள்வது
மௌன கதிர்களைதான்..
இந்நாட்களில்..
என் அன்யோன்யம்..
உன் நேர சிக்கலால்
அனாவசியம் ஆனதோ?
சிலசமயம்
நீயும் குரூரம்தான்..
நியாயப் படுத்தாதே
இதையும்.. எதையும்..
என்றேனும்
தனிமையில் அமர்கையில்
பேசாமலே என்குரல்
கேட்கும் உன் செவிகளில்..
இப்போதெல்லாம்
நான் அழுவதில்லை..
ஏற்றுகொள்கிறேன் வாழ்க்கையை..
எதிர்பார்கிறேன் மாற்றங்களை..
மாற்றத்திற்கு..
உன் பிரசன்னமும்
விதிவிலக்கல்ல என்பதை
புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..
இதை மட்டும் நான் எழுதலைங்கோ...
பெறுநர்,
முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை
ஐயா.,
செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்.,
எதிலும் தமிழ்னு சொன்னீங்க...
ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..
நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..
அந்த இடம் - நம்ம டாஸ்மாக்
அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..
நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..
உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல நல்ல பேரா வைங்க..
மிடாஸ் கோல்ட் - தங்க மகன்
நெப்போலியன் - ராஜராஜ சோழன்
கோல்கொண்டா - கங்கைகொண்டான்
வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்
ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு
சிக்னேச்சர் - கையெழுத்து
ஓல்டு மாங்க் - மகா முனி
ஜானி வாக்கர் - வெளிநடப்பு
கார்டினல் - பொதுக் குழு
மானிட்டர் - உளவுத் துறை
மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே
ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000
வாழ்க தமிழ்..
வாழ வைங்க தலைவரே....
முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை
ஐயா.,
செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்.,
எதிலும் தமிழ்னு சொன்னீங்க...
ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..
நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..
அந்த இடம் - நம்ம டாஸ்மாக்
அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..
நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..
உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல நல்ல பேரா வைங்க..
மிடாஸ் கோல்ட் - தங்க மகன்
நெப்போலியன் - ராஜராஜ சோழன்
கோல்கொண்டா - கங்கைகொண்டான்
வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்
ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு
சிக்னேச்சர் - கையெழுத்து
ஓல்டு மாங்க் - மகா முனி
ஜானி வாக்கர் - வெளிநடப்பு
கார்டினல் - பொதுக் குழு
மானிட்டர் - உளவுத் துறை
மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே
ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000
வாழ்க தமிழ்..
வாழ வைங்க தலைவரே....
விடியல் எங்கே?

இரவு முடிந்திருந்தும்
என் உலகம் இன்னும் இருளில்..
விடியல் தொலைத்துவிட்டேன்
விடியும் நாள் வருமோ?
அன்பாய் பேசிய நீ
இன்று அந்நியன் ஆனது ஏன்?
என் மனதின் அழுகுரலும்
உன் செவியேற மறுப்பது ஏன்?
தொலைந்த என் விடியல்
தேடி ஓடுகிறேன்
கனவிலும் கதறலொலி
செவிடாகி ஊமையானேன்..
எங்கே உன்னை தொலைத்தேன்
தேடி கிடைக்கவில்லை
நீயே வருவாயா?
என் தேடல் முடிப்பாயா?
விந்தை இவ்வாழ்க்கை
சிந்தை கலங்கியதே
இறுதி மூச்செதுவோ?
என் இறுதி மூச்சிதுவோ?
ஒவ்வொரு நிமிடத்திலும்
ஆயிரம் கேள்வி நெஞ்சில்
ஐந்தேனும் அறிவாயோ?
விடைகள் பகர்வாயோ?
பேச தொடங்கவில்லை
பின் பேச்சு முடிவதெங்கே?
வெறுத்தேன் எனை முழுதும்
பித்து மனம் முழுதும்..
உலகம் ஒளி மறந்தால்
உதடுகள் மொழி மறக்கும்
இதை நீ அறிந்திலையோ
என் எண்ணம் புரிந்திலையோ?
மனமே பேசிடுவேன்
கேள்விகள் கேட்டிடுவேன்
பதில் வரும் காத்திருப்பேன்
பதில் வரும் காத்திருப்பேன்..
முடிந்த பயணம்

தற்கொலை செய்து கொண்ட
மனிதனின் பிணம் அகற்ற
ரெயில் வண்டி நின்றது..
எட்டி பார்த்தேன்..
வானம் பார்த்த கையும்,
நொறுங்கி கிடந்த காலும்..
உதைத்தெறிந்த பந்தாக தலையும்
சிதறுண்டு கிடந்தன..
நெஞ்சில் மலையின்
பாரம் உணர்ந்தேன்..
மூச்சு திணறியது
சிரமபட்டு சவாசித்தேன்..
நேற்று வரை எங்கெங்கோ
ஓடி உழைத்த கால்கள்
ஓய்வடைந்து விட்டன..
நேசமாய் பல பேரின்
கை பற்றின கரங்கள்
வானம் பார்த்துவிட்டன..
காதல் தோல்வியோ..
குடும்ப பிரச்சனையோ..
வேலை கிடைக்கவில்லையோ..
கடன் சுமையோ..
விதவிதமாய் யூகம் செய்ய
முயற்சித்தது மனசு..
வேண்டாம்.. யோசிக்க வேண்டாம்..
மனதை அமிழ்த்தியது பாரம்..
நினைவை திசை திருப்ப
தீவிரமாய் முயற்சி செய்தேன்..
ரெயில் வண்டி
நகர ஆரம்பித்தது..
திரும்ப கூடாது என்று
உறுதியெடுத்து கொண்டேன்..
என்றாலும் ஜன்னல் பக்கம்
பார்வையை திருப்பின கண்கள்..
விடைபெற்று கொள்கிறேன்
என்பது போல் கிடந்தன
ரெயில் தண்டவாள ஓரத்தில்
அதே கரங்கள்..
நேசம்
விளங்காத கவிதை..

கவிதைகள் எழுதியதும்
முதலில் நீ படி எனக் கொடுப்பேன்
ஒன்றும் புரியாமல் வாசித்து
ஆஹா ஓஹோ என்று கை தட்டுவாய்..
பிரசவ வலி வந்தவள்
புருஷனை தேடுவது போல்
கனவிலும் உன்னைத்தான்
தேடிக் கொண்டு இருந்தேன்..
எந்த விஷயத்தையும் முதலில்
நான் சொல்ல துடித்தது
உன்னிடம் தான் என்றேன்
சொல்லாதேதும் இல்லை என்றேன்..
நானும் அப்படி தான்
என்று நீயும் சொன்னாய்..
உன்னிடம் நான் எதையுமே
மறைத்ததில்லை என்றாய்..
எல்லாவற்றையும் சொல்லி செய்த நீ..
ஏன் என்னை பிரியும் போது மட்டும்
திருடன் போல சொல்லாமல்..
கொள்ளாமல் மறைந்து போனாய்..
என் தலையணை பிழிந்துப் பார்
உனக்காக நான் எழிதிய
கண்ணீர் கவிதைகளையாவது
உன்னால் புரிந்து கொள்ள
முடிகிறதா பார்க்கலாம்..
வாழ்க்கை பயணம்..

வாழ்க்கை பயணம்..
நீண்டு நெளிந்த பாதையில்
எத்தனை புன்னகைகள்..
எத்தனை கண்ணீர்த்துளிகள்..
எத்தனை கோவங்கள்..
எத்தனை வெறுமைகள்..
மறந்து போன முகங்கள்..
மறக்க நினைக்கும் முகங்கள்..
நம்மையே கொஞ்சம்
மறக்க செய்யும் முகங்கள்..
எத்தனை உணர்வுகள்..
எத்தனை நெகிழ்ச்சிகள்..
எத்தனை உறவுகள்..
எத்தனை பிரிவுகள்..
வாழ்க்கை பயணம்..
நீண்டு நெளிந்த பாதையில்..
உண்மை தெரியுமா?
மண்வாசம் எங்கே போச்சு?

புழுதி சாலைகளும்..
சடுகுடு ஆட்டங்களும்..
பச்சை வயல்களும்..
பசுவின் மணியோசையும்..
குளக்கரை குளியலும்..
கூட்டஞ்சோறு கும்மாளமும்..
அரசமர பிள்ளையாரும்..
திண்ணை வீடுகளும்..
அடர்ந்த தோப்புகளும்..
அடுத்த வீட்டு சொந்தங்களும்..
சாணம் தெளித்த வாசல்களும்..
கிணற்றடி விவாதங்களும்..
எங்குதான் தொலைந்தது போயின
இந்த அவசர யுகத்தில்..
காற்றை தவிர இங்கே
எல்லாவற்றிற்கும் விலையுண்டு..
கழனிகள் வீடுகளாகின
பறவைகள் யோசித்தன
எப்படி உணவு கிடைக்கும்
இந்த மனிதர்களுக்குகென்று..
கற்பனை உலகில்..

முடியாததேதும் இல்லை
கிடைக்காத பொருட்கள் இல்லை
வெறுக்கின்ற உள்ளம் இல்லை
பொய் முக மனிதர் இல்லை..
கரைந்து போன நிமிடங்களுக்கு
கடத்தி போன தருணங்களுக்கு
மறுபிறவி கொடுக்கும் கடவுள்
கற்பனை..
இருந்தாலும்..
இது தீர்வு அல்ல..
இது தொடர்ந்தால்...
இது தொடர்ந்தால்...
இப்படியே உறங்கி போவேன்..
விடியல் மறந்து போகும் என் இரவு..
இது முடிவு இல்லை
இது மயக்கம்..
விழித்து கொண்டேன்..
கடந்து போன நிமிடங்கள் நினைத்து..
கடக்க வேண்டிய காலம்
வீணடிதேனோ..
விழித்து கொண்டேன்..
இது தீர்வு அல்ல..
இது தொடர்ந்தால்..
இப்படியே உறங்கி போவேன்..
கற்பனை சிறை உடைக்க
வலிய நெஞ்சம் வேண்டும்..
நிஜத்தை பிரித்துணர
நீடிய சாந்தம் வேண்டும்..
விழித்து கொண்டேன்..
இனி கற்பனை உலகம் வேண்டாம்..
இது உறக்கம் இல்லை
ஒருவகை மரணம்..
விருப்பம்

யாராவது
யாரோடாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்..
மௌனமாய்
இருக்க
யாரும்
விரும்புவதில்லை..
அடுத்து பார்க்கும்
போது..
உதவி கேட்பார்களோ..
பக்குவமாய் பேசி..
சொத்து கேட்பார்களோ..
என்ற
சங்கடத்தோடு..
சாலைகளில்
சந்திக்கையில்
மௌனமாய்...
ஒரு
புன்னகையோடு
புதைக்கிறார்கள்
மனிதநேயத்தை..
இருந்தாலும்
யாராவது
யாரோடாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்..
வாழ்க்கை வாழ்வதற்கே..
ஈரம்
மண்ணீர் வற்றி,
கண்ணீர் குடிக்கையில் தான்,
நீரின் அருமை புரியும்..
செந்நீர் வற்றி
தேகம் கொதிக்கையில் தான்..
நீரின் அருமை புரியும்..
கண்ணீர் குடிக்கையில் தான்,
நீரின் அருமை புரியும்..
செந்நீர் வற்றி
தேகம் கொதிக்கையில் தான்..
நீரின் அருமை புரியும்..
ஏழைகள்

வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில்
இதழ் ஒடிந்த பூக்கள்..
முகவரி தொலைத்த பறவைகள்..
வாழ்க்கை என்னும் வேக குதிரையின்
கடிவாளம் தவறவிட்ட ஜீவன்கள்..
இவர்கள் பாதையில் கற்கள்..
சிரசில் வறுமை என்னும் முள் கிரீடம்..
இவர்கள் முதுகில்
யானைகளை ஏற்றி விளையாடின
ஆதிக்க குரங்குகள்..
நிகழ் காலத்துடன் போராடும்
தோல் போர்த்திய எலும்பு கூடுகள்..
மரணத்திற்கு காத்திருக்கும்
செல்லா காசுகள்,
பார்க்கலாம் காலனுக்காவது
கருணை இருக்கிறதா என்று...
திரும்புமா?
படிக்காமல் வகுப்பறை நுழைய பயந்து..
கலை நிகழ்ச்சிகளில் கும்மியடித்து..
அழகு ஒப்பனை செய்கிறேன் என்ற
பெயரில் அலங்கோலபடுத்தி..
செல்ல பெயர் சூட்டி
நிஜ பெயர் மறந்து..
கல்லூரி வளாகம் எங்கும்
காலடி பதித்து..
வாழ்க்கை என்பதன் நோக்கம்
அறியாது குதூகலித்து..
கள்ளம் இல்லா புன்னகையோடு..
கை கோர்த்து திரிந்த காலம் திரும்புமா???
கலை நிகழ்ச்சிகளில் கும்மியடித்து..
அழகு ஒப்பனை செய்கிறேன் என்ற
பெயரில் அலங்கோலபடுத்தி..
செல்ல பெயர் சூட்டி
நிஜ பெயர் மறந்து..
கல்லூரி வளாகம் எங்கும்
காலடி பதித்து..
வாழ்க்கை என்பதன் நோக்கம்
அறியாது குதூகலித்து..
கள்ளம் இல்லா புன்னகையோடு..
கை கோர்த்து திரிந்த காலம் திரும்புமா???
அன்பு
இப்படியும் யோசிக்கலாம்..
நட்பு

வம்பு சண்டை போட்டு
வாய் வலிக்க வாதாட வைத்து..
கம்பு சண்டை போட்டு
கை கிழித்து இரத்தம் பார்த்து..
அலட்டலாய் பேசி கோபமூட்டி
சீண்டி விட்டு கடுப்பேற்றி..
ஆதங்கமாய் பேசுகையில்
கை கொட்டி சிரித்து..
ரசிக்கும் படியாய் வெறுப்பேற்றி..
பிடித்தவற்றை மட்டம் தட்டி அழ வைத்து..
போர்கள எதிரி போல் சண்டையிட்டு..
சேட்டைகள் செய்து பேயாட்டம் போட்டு ..
விலங்குகளின் பெயர்களில் அர்ச்சனை செய்து..
சோகம் மறக்க செய்வாய்..
நாட்களை நட்பாக்கினாய்..
புன்னகையை சொந்தமாக்கினாய்..
எண்ணங்களை தெளிவாக்கினாய்..
மனதின் வலியை புன்னகை
போர்வை கொண்டு மூடி..
இதழ் முழுக்க மந்திர சிரிப்புடன் சுற்றும்..
அன்பான நட்பே..
வெறுமை

மன அமைதிக்காக
கடற்கரை சென்றேன்.
ஓடி வந்த அலைகள்
ஏதோ சொல்ல துடிக்க,
அலைகளை உற்று
பார்த்தேன்.
காதுகளை கூர்மையாக்கி
கேட்டேன்.
அலைகள் எழுகையில் அதில்
உன் பிம்பம்.
பிடிக்க எழுந்தேன்,
ஒளிந்து, மறைந்து
விளையாட்டு காட்டியது
உன் முகம்.
அலைகளின் மொழிகள்
உன் பெயரை
எதிரொலிக்க,
சப்தமிட்டு கதறினேன்.
கடலின் பேரிரைச்சலின் முன்,
என் காதலின் அலறல்
எடுபடவில்லை.
ஒன்று மட்டும் சொல்கிறேன்,
உன் இதயம் கூட
என் அளவு
உனக்காய் துடித்திருக்காது...
Subscribe to:
Posts (Atom)




































