தன் வலி மறந்து என் வலிக்கு நோகிறாள்.. எத்தனை வயதானாலும் குழந்தை போல பார்க்கிறாள்.. உலகமே வெறுத்தாலும் உயிர் கொண்டு ரசிக்கிறாள்.. அன்பை தவிர வேறேதும் தெரியவில்லை அவளுக்கு..
நினைப்பதை எல்லாம் செய்யவிடுவதில்லை காலம்.. தான் நினைப்பதைத்தான் நம்மேல் புகுத்துகிறது.. காலத்தை இழுத்துப்பிடித்து காட்சிகளை மாற்ற திறமை இல்லை எனக்கு.. காலத்தின் கணக்குகளை கவனித்தபடி நகர்கின்றன நாட்கள்..
எழுத்தாளரின் மனசாட்சி.. எதிர்பார்ப்புகளின் வரைப்படம்.. காலத்தின் உறைநிலை.. அறிவின் கற்பகவிருட்சம்.. ஓய்வு நேரங்களில் உனை கைகோர்கிறேன் ஆனந்தமாய்.. வெறுமையிலும் தனிமையிலும் உன் தோள் சாய்கிறேன்.. ஆறுதலாய்..
நீ நிலவு...பௌர்ணமி நிலவு.. ஒரு முழுமை உள்ளது உன்னிடம்.. இரவில்..நீ உறங்குவதால் தான் நிலவு விழிகிறதோ??? விண்ணில் பல விண்மீன் இருந்தும் கண்ணை கவர்வது நிலவு.. மண்ணில் பல பெண்கள் இருந்தும் நெஞ்சில் நிறைந்தது நீ..
விழியின் வழி புகுந்தாய் பின் இதயம் தனில் உறைந்தாய்.. செயல்கள் தனில் கலந்தாய் என் உயிரிலும் நீ நிறைந்தாய்.. மூச்சில் உன்னை உணர்ந்தேன் உன் பேச்சில் என் பெயர் மறந்தேன்.. கவிதை புனைய வைத்தாய் உன்னை கனவிலும் தேட வைத்தாய்.. காதல் கற்று கொடுத்தாய் மனம் முழுதும் பித்து கொடுத்தாய்..
குழந்தை குணம் மாறி போச்சு.. வியாபார வாழ்கை ஆச்சு.. அன்புக்கு மதிப்பு போச்சு. காசுதான் கடவுள் ஆச்சு.. சிரிப்புக்குள்ளும் வேஷம் ஆச்சு.. பந்தபாசம் எங்கே போச்சு.. நெஞ்சமெல்லாம் வஞ்சம் ஆச்சு.. நேசம் மறந்து நாள் பல ஆச்சு.. வாழ்க்கை ரொம்ப அவசரமாச்சு.. நல்லதெல்லாம் செத்து போச்சு.. எல்லாமே நவீனமாச்சு.. இந்த மனிதம் தான் எங்கே போச்சு???